24 66457e022c030
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

Share

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூபா310 தொடக்கம் 320 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக முதல் மூலதன ஆராய்ச்சி நிறுவனம் (First Capital Research) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்தவுடன், இறக்குமதிகளுக்கான தேவை அதிகரித்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆரம்பிக்கப்படும் நிலையில் இந்த சரிவு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை 2029ஆம் ஆண்டு வரை 06 முதல் 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்த வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

இது கடன் மறுசீரமைப்புக்கு பின் 03 தொடக்கம் 04 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறையலாம்.

இந்தநிலையில் குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான பண வரம்பு வைப்புத் தேவைகளை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தளர்த்தியுள்ளது.

அத்துடன் அரசாங்கம், வாகன இறக்குமதி உட்பட தற்போதுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இது ரூபாய் மாற்று விகிதத்தில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூலதன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுற்றுலா வருவாயில் முன்னேற்றம் மற்றும் அதிக பணம் அனுப்புதல் ஆகியவற்றின் மத்தியில் ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதோடு சுற்றுலா வருவாய் 46.3 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு 03 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.

இதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் கடந்த ஆண்டு பதிவான 06 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து இந்த ஆண்டு 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 2025 12 02 093823108
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவு கடற்படை வீரர்கள் விபத்து: காணாமல் போன 5 பேரில் ஒருவரின் உடலம் மீட்பு!

அதிதீவிர வானிலைக் காரணமாக முல்லைத்தீவு சாலை முகத்துவாரப் பகுதியில், மணலை அகற்றி விரிவுபடுத்தும் பணியின்போது, கடந்த...

IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர்...

25 68663a41415fd
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் பேரிடர் நிர்வாகத்தை அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும்: நாமல் ராஜபக்ச!

பேரிடர் சூழ்நிலையை நிர்வகிக்க அரசாங்க இயந்திரம் இன்னும் தயாராக இல்லை என்று சுட்டிக்காட்டிய சிறிலங்கா பொதுஜன...

MediaFile 4
இலங்கைசெய்திகள்

வட்டியில்லா மாணவர் கடன்: விண்ணப்பக் காலக்கெடு டிசம்பர் 15 வரை நீடிப்பு!

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பக் காலக்கெடு 2025.12.15 ஆம் திகதி வரை...