tamilni 49 scaled
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் மகளின் தாக்குதலில் பலியான தந்தை

Share

காலி – வந்துரம்ப – கடம்புராவ பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள் தாக்கியதில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை உணவில் மருந்துகளை கலப்பது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தனது தந்தையை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்த தந்தை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் எனவும், அவரது மகளால் தாக்கப்பட்ட சிறிது நேரத்தில், அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரயவந்துள்ளது.

அப்போது தாயும் வீட்டில் இருந்ததாகவும், அவரும் அவரது மகளால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

22 வயதுடைய பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த தந்தை 54 வயதானவர் எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...