யாழில் தொடர் காய்ச்சலால் நாதஸ்வர வித்துவான் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர் காய்ச்சல் காரணமாக நாதஸ்வர வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (12.08.2023) யாழ்ப்பாணம் – கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நாதஸ்வர வித்துவான், ஐந்து தினங்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுத் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சலின் தீவிரத் தன்மையை அடுத்து நேற்றுமுன்தினம் (11.08.2023) யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (12.08.2023) உயிரிழந்துள்ளார்.
Leave a comment