11 9
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் குறித்து தென்னிலங்கையின் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலின் வெற்றியாளர் குறித்து தென்னிலங்கையின் மூத்த பத்திரிகையாளர் வெளியிட்டுள்ள தகவல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவாரென மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் களம் தீவிரமடைந்துள்ள நிலையில் இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது ‘இதுவரை பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டனர். ஆனால் இம்முறை மூவர் போட்டிக்களத்தில் உள்ளனர்.

 

எதிர்க்கட்சி தரப்பில் இருக்கும் இருவரின் வாக்குகள் இரண்டாக பிரியும் நிலைமை உள்ளது . அது ரணிலுக்கு சாதகமாக அமையும் என விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

 

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடாத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு, அரசியல்வாதிகள் உட்பட பலர் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.

 

இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தபால் மூல வாக்குகளில் அனுகூலம் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...