2 17
இலங்கைசெய்திகள்

அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்….! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்

Share

அநுர கட்சிக்குள் குடும்ப அரசியல்….! தென்னிலங்கை அரசியலில் குழப்பம்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் குடும்ப அரசியலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்பில் இரண்டு பட்டியல்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையே அதற்குக் காரணமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க களுத்துறை மாவட்டத்திலும் அவரது மகன் சத்துரங்க அபேசிங்க கொழும்பு மாவட்டத்திலும் போட்டியிடுகின்றனர்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

அதேவேளை, அவரது மனைவி சமன்மலி குணசிங்க கொழும்பு மாவட்டத்தில் இருந்து தேர்தலில் போட்டியிடுகின்றார்.

இலங்கையில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும், ஊழலை அழிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...