மின்சாரம் தாக்கியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
துன்னாலை ஆண்டாள் வளவு பகுதியைச் சேர்ந்த வி.விஜிதரன் (வயது-33) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.
குறித்த சம்பவம் கரவெட்டி வடக்கு பகுதியில் இன்று இடம்பெற்றது என நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment