இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல்!
இலங்கைசெய்திகள்

இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல்!

Share

இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல்!

இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு செயற்படுவதாக பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்தே மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் கோரும் துபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த இரு குற்றவாளிகளில் ஒருவர் மேல் மாகாணத்தில் வசிக்கும் வர்த்தகர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து கையாட்களை வைத்து கப்பம் கேட்பதாகவும், மற்றைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி தென் மாகாணத்தை மையமாக கொண்டு கப்பம் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாகவும் புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழுள்ள கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவினரும் இவர்கள் இருவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறன்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...