A young india
இலங்கைசெய்திகள்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை நீடிப்பு

Share

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் தற்போதைய வயதெல்லையை அதிகரிக்க தயாரிக்கப்பட்ட சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்க சட்டவரைபு ஒன்று தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி தயாரிக்கப்பட்ட சட்டவரைபு பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்றுறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் விடங்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் குழுவில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயதாக நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனியார் துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதில் திருத்த சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...