ship
அரசியல்இலங்கைசெய்திகள்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் தீ விபத்து – இழப்பீடு கிடைப்பதில் தாமதம்!

Share

கொழும்பு துறைமுகத்துக்கு சில மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் எக்ஸ்-பிரஸ் பேர்ள் எண்ணெய் கப்பல், தீ விபத்து காரணமாக இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய  இரண்டாவது இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எக்ஸ்-பிரஸ் பேர்ல் எண்ணெய் கப்பலிருந்து சேதங்களை மீட்கும் பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  முதற்கட்டமாக இலங்கைக்கு 3.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடாக கிடைத்துள்ளது.

இரண்டாம் கட்டத்திற்கான மொத்த இழப்பீடு 4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாகும்.  முதல் தவணையாக 02.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு அந் நிறுவனம் இணக்கம் தெரிவித்த போதிலும், இலங்கைக்கு இதுவரை நட்டஈடு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதுதொடர்பில் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹந்தபுரவிடம் வினவியது போது,

கடந்த ஆண்டு மே 24ஆம் தேதி நள்ளிரவில் எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்தது.

இதனால் நாட்டின் கடல்பரப்புக்கு  ஏற்பட்டுள்ள சேதம் மிகப்பெரியது என தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...