15 6
இலங்கைசெய்திகள்

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

Share

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

காலாவதியான அரிசி கையிருப்புகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் அவற்றின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுவிப்பது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான அரிசியின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுகின்ற கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுடன் இவ்வாறான செயற்படுகள் காரணமாக அப்பாவி நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தவிசாளர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...