15 6
இலங்கைசெய்திகள்

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

Share

காலாவதியான அரிசி விற்பனை : நுகர்வோர் அதிகாரசபையின் அதிரடி நடவடிக்கை

காலாவதியான அரிசி கையிருப்புகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் அவற்றின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுவிப்பது தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலாவதியான அரிசியின் திகதிகளை மாற்றி சந்தைக்கு விடுகின்ற கடத்தல்காரர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் அரிசி தட்டுப்பாட்டுடன் இவ்வாறான செயற்படுகள் காரணமாக அப்பாவி நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை (Sri Lanka) சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தவிசாளர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...