2020 11 09T114528Z 401439984 RC2NZJ9UB98H RTRMADP 3 HEALTH CORONAVIRUS VACCINES PFIZER
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு மாணவர்களுக்கு காலாவதியான பைஸர்!

Share

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காலாவதியான இந்தத் தடுப்பூசிகளை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

வடக்கின் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன. இது தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ சுகாதாரத் துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது,

“இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படதா?” என்று அவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம் தான் கேட்க வேண்டும்” என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார்.

அதேவேளை, ஏனைய மாகாணங்களில் சிலவற்றில் இந்தத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதிகாரிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என்று அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
62a15150 5261 11f0 a2ff 17a82c2e8bc4.jpg
செய்திகள்உலகம்

வரலாறு படைத்த ஜோஹ்ரான் மம்தானி: நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மற்றும் இளம் மேயராகத் தேர்வு!

அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயராக இருந்தவர் எரிக் ஆடம்ஸ். இவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டு...

11ad0a96d3aaa13d73a54e4883f2f59c
உலகம்செய்திகள்

கென்டகி விமான நிலையத்தில் கோர விபத்து: சரக்கு விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்தது – 3 பேர் பலி!

அமெரிக்காவின் கென்டகி மாகாணம், லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு...

23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...