2020 11 09T114528Z 401439984 RC2NZJ9UB98H RTRMADP 3 HEALTH CORONAVIRUS VACCINES PFIZER
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடக்கு மாணவர்களுக்கு காலாவதியான பைஸர்!

Share

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு காலாவதியான பைஸர் தடுப்பூசிகளே ஏற்றப்படுகின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது என்று யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

தற்போது வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இதன்போது 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் காலாவதியான தடுப்பூசிகளே மாணவர்களுக்கு ஏற்றப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், காலாவதியான இந்தத் தடுப்பூசிகளை 2022ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையில் ஏற்றுவதற்கு அதிகாரிகளால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய கடந்த 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் தெரியவருகின்றது.

வடக்கின் ஏனைய பாடசாலை மாணவர்களுக்கும் இந்தத் தடுப்பூசிகளே ஏற்றப்படவுள்ளன. இது தொடர்பாக மாணவர்களுக்கோ, பெற்றோர்களுக்கோ சுகாதாரத் துறையால் எந்த விளக்கமும் இதுவரை வழங்கப்படவில்லை.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனிடம் கேட்டபோது,

“இந்தத் தடுப்பூசியே நாடு முழுவதும் ஏற்றப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சின் தடுப்பூசி தொடர்பான ஆலோசனைக் குழுவின் பரிந்துரையுடனேயே காலாவதியான தடுப்பூசியை பயன்படுத்தும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசிகளை 2022 ஒக்ரோபர் 31 ஆம் திகதி வரை பாவனைக்குட்படுத்தலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

“காலாவதியாகி சில மாதங்கள் கடந்த பின்னரான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படதா?” என்று அவரிடம் கேட்டபோது, “நாடு முழுவதும் இந்தத் தடுப்பூசியே செலுத்தப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விவரங்களை நீங்கள் சுகாதார அமைச்சிடம் தான் கேட்க வேண்டும்” என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்தார்.

அதேவேளை, ஏனைய மாகாணங்களில் சிலவற்றில் இந்தத் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், அதிகாரிகளின் எதிர்ப்பால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது என்று அறியமுடிகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...