20230401 125915 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல் – யாழில் கண்காட்சி

Share

யாழ்.அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் “குருதிச் சோகையை நிவா்த்தி செய்தல்” என்ற தொனிப் பொருளிலான கண்காட்சி நடத்தப்பட்டிருக்கின்றது.

குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலை வகைகள் மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது தொடர்பான குறித்த கண்காட்சியினை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தின.

இக் கண்காட்சியில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கை மேம்படுத்துவதற்காக போஷாக்கு உணவு கண்காட்சியும் முன்னெடுக்கப்பட்டது.

இதில் இலகுவாக இயற்கையாக கிடைக்கக்கூடிய இலை வகை மற்றும் காய்கறி வகை கொண்டு

பாரம்பரியமான உணவு தயாரித்து வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் வீடுகளில் இவ்வாறு போசாக்கினை மேம்படுத்துவதற்கு உணவினைத் தயாரிப்பது தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாாி, அதிகாரி நல்லூர் சுகாதார வைத்திய அதிகாாி, அச்சுவேலி வைத்திய அதிகாரி மற்றும் வைத்தியர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் குடும்ப நல உத்தியோகத்தர்கள் சுகாதார பரிசோகர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...