rtjy 34 scaled
இலங்கைசெய்திகள்

மைத்திரியை கண்டு அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

Share

மைத்திரியை கண்டு அச்சப்படும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

தற்போது நாட்டின் மாற்றம் தெளிவாக தெரிவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“2015 முதல் 2019ஆம் ஆண்டு வரை எனது பணிக்காலம் மோசமாக இருந்தது என்று கூறினார்கள். எனக்கு எதிராக எப்படி எல்லாம் பேசினார்கள். இப்போது வித்தியாசம் தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் நிலை குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்.

நாட்டிற்கு நிலையான அரசாங்கம் தேவை. அதுதான் முதல் விடயமாக உள்ளது. ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பிலும் முன்னாள் ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

எனது சொத்துக்கள் குறித்த அறிக்கையை அளித்துள்ளேன். எல்லாற்றிலும் நான் சிக்கிக்கொண்டுள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு அரசாங்கமும் உங்களைப் பார்த்து பயப்படுவதாகத் தெரிகிறதா? என அவரிடம் வினவிய போது என்னை பார்த்தால் அனைவருக்கும் பயம் தான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...