maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

விமர்சித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை!! – மைத்திரிபால

Share

ஊடகங்களுடன் பிரச்சினைகள் இருப்பின் அதனை பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், கட்டளை தொடர்பான விவாதத்தின் போதே  அவர் இதனை தெரிவித்தார்.

அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் என்னை ஊடகங்கள் திட்டமிட்டு விமர்சித்தன. எம்.பிக்கள் தொடர்பில் பொய்யான செய்திகளையும் வெளியிட்டன. தவறான வகையில் தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்கப்பட்டது.

நான் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக ஊடக சுதந்திரத்தை முழுமையாக வழங்கியிருந்தேன். என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது இங்கேயே தீர்த்துக்கொள்வோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள்...

29
இலங்கைசெய்திகள்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

28
இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளிவருவதைத் தடுக்க அரசாங்கம் சதி! முஜிபுர் ரஹ்மான்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள்...

27
இந்தியாசெய்திகள்

போனில் பேசிய ராகுல் காந்தி – வீட்டை விட்டு வெளியேறிய விஜய் எங்கே சென்றார்?

36 மணி நேரங்களுக்கு பின்னர் தவெக தலைவர் விஜய் தனது வீட்டை வெளியேறியுள்ளார். கரூரில் தவெக...