24 66304a61af010
இலங்கைசெய்திகள்

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா

Share

பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா

ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டியை 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக அதிகரிப்பது நியாயம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 115 பில்லியன் ரூபா பயனாளிகளின் கணக்குகளில் சேர்க்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் மூலம் பயனாளிகளுக்கு நீதி கிடைத்துள்ளதில் தான் பெரும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக சுமார் 27 இலட்சத்திற்கும் அதிக ஊழியர்களின் சேமலாப நிதியம் இந்த வட்டி வீத அதிகரிப்பின் மூலம் பல நன்மைகளை பெற்றுத்தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் குழு 31.12.2023 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் மீதிக்கு 13 சதவீத வட்டி விகிதத்தை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது” என மத்தியவங்கி அறிவித்துள்ளது.

இதற்கிடையில், 31 டிசம்பர் 2023 இன் படி EPF உறுப்பினர் நிலுவைகளுக்கான வட்டி விகிதமாக 13% விண்ணப்பிப்பதற்கான அனுமதியை இலங்கை மத்திய வங்கி வழங்கியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...