EPF - ETF நிதிகளுக்கு ஆபத்து
இலங்கைசெய்திகள்

EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து

Share

EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அமைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தோட்டப்புறங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நகர்ப்புற பகுதிகளில் பணிபுரிபவர்கள், மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்கான தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்.

அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்படும் பணம் எமது நட்டு மக்களுக்கு சொந்தமான ஒன்றாகும்.

எங்கள் நிதியைத் தொட எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒருமுறை எடுத்துக்கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...