ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சோல்ஹைம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்தியாவின் சென்னை நகரிலிருந்து அவர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ. 271 விமானத்தில்அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
எரிக் சோல்ஹைம், கடந்த யுத்த காலத்தின் போது நோர்வேயின் அமைதிக்கான பிரதிநிதியாக இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews