விமானப் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு

Airport

தடைசெய்யப்பட்ட பொருட்கள், மட்டுப்படுத்தப்பட்ட பொருட்கள், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் வர்த்தக அளவிலான பொருட்களை விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் மூலம் எடுத்துச் செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து விமானப் பயணிகளுக்கும் இலங்கை சுங்கம் அறிவுறுத்தியுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில், செயற்படுத்தப்பட்டுள்ள குறித்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

#SriLankaNews

Exit mobile version