000 1NF1IR
இலங்கைசெய்திகள்

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால சட்டம் நிறைவேற்றம்!!

Share

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருள்களை ஒழுங்குபடுத்துவதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் கொண்டுவரப்பட்டுள்ள அவசரகால சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் இன்று நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 31 ஆம் திகதி இரவோடு இரவாக குறித்த விடயம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை 10 மணி முதல் சட்டவரைபு தொடர்பான விவாதம் சபையில் இடம்பெற்ற நிலையில், மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இவ் வாக்கெடுப்பின்போது அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும்,எதிராக 51 வாக்குகளும் பதிவுசெய்யப்பட்டு 81 மேலதிக வாக்குகளால் அவசரகால சட்டவரைபு நிறைவேற்றப்பட்டுள்ளது,

இதனைத் தொடர்ந்து நாட்டில் தற்போது அவசரகால சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
26 69755fc19b197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கழிப்பறைக்குச் சென்ற 4 பிள்ளைகளின் தாய் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் கழிப்பறைக்குச் சென்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து...

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...