17 8
இலங்கைசெய்திகள்

டிக்டொக்கை வாங்குவது தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு

Share

டிக்டொக்கை வாங்குவது தொடர்பில் எலான் மஸ்க்கின் நிலைப்பாடு

டிக்டொக்(Tik Tok) செயலியை வாங்க தனக்கு விருப்பமில்லை என்று பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) தெரிவித்துள்ளார்.

டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் சீனாவைச்(China) சேர்ந்தது என்பதால், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டொக்கை தடை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், ஜேர்மனியில் பெரும் செல்வந்தர் மத்தையாஸ் டெஃனர் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் எலான் மஸ்க் டிக்டொக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “டிக்டொக்கை வாங்க நான் விருப்பம் தெரிவிக்கவில்லை. அதை வாங்கும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை தனிப்பட்ட முறையில் டிக்டொக்கை பயன்படுத்துவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

ஜோபைடன் ஜனாதிபதியாக இருந்தபோது அமெரிக்காவின்(USA) டிக்டொக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. டிக்டொக் செயலி மூலம் அமெரிக்கர்களை சீனா உளவு பார்க்கிறது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்ற உடன், டிக்டொக் செயலி தடை செய்யப்படுவதை நிறுத்தி வைக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார்.

டிக்டொக் செயலியை தடை செய்வதை 75 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும்படி அமெரிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டிக்டொக் செயலி செயல்பட வேண்டும் எனில், அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு அதன் 50 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஏற்கனவே கூறியிருந்தார்.

மேலும், சீன நிறுவனத்தின் டிக்டொக் செயலியை தொழில்நுட்பத்துறை கோடீஸ்வரரான எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் வாங்கினால், அதனை வரவேற்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...