tamilnid 10 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் கருத்து சுதந்திரம் குறித்து எலிசபெத் அதிருப்தி

Share

இலங்கையின் கருத்து சுதந்திரம் குறித்து எலிசபெத் அதிருப்தி

இலங்கையில் ஏற்பட்டுள்ள சில கரிசனைகள் உட்பட கருத்து சுதந்திரத்தின் பல அம்சங்கள் தற்போது உலகளாவிய ரீதியில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்க பொது இராஜதந்திரத்திற்கான துணைச் செயலாளர் எலிசபெத் ஆலன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

‘உலகளாவிய ஊடக வெளியும் ஜனநாயகத்தின் மீதான அதன் தாக்கமும்’ என்ற தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் கூறுகையில், ”இலங்கை உட்பட உலகளவில் பல அத்தியாவசிய சுதந்திரங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்கா கருத்து சுதந்திரத்திற்காக உறுதியாக நிற்கிறது, இணையத்திலும் வெளியிலும் பத்திரிகை சுதந்திரத்திற்காக வாதிடுகிறது.

இலங்கையில் இணைய பாதுகாப்பு சட்டமூலம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. கருத்துச் சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றில், குறித்த சட்டத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் கவலை தெரிவித்துள்ளது.

இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உள்ளடக்கத்தை தணிக்கை செய்வதன் மூலமும் பொதுமக்களிடமிருந்து தகவல்களை தடுக்கும் முயற்சிகளை அரசாங்கங்கள் தீவிரப்படுத்தும் போது, நாம் அது தொடர்பில் பேச வேண்டும்.

கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக அதிருப்தி இருந்தாலும், சுதந்திரமான ஊடகம் இலங்கைக்கு எதிரி அல்ல என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

சுதந்திரமான ஊடகம் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றாகும், இது ஒரு நெகிழ்ச்சியான மற்றும் செழிப்பான சமுதாயத்திற்கு வழி வகுக்கிறது. கட்டுப்பாடற்ற கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வாதங்களைக் கேட்பது பொதுவானது.

அரசாங்கங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்துவதையும் பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஊடகங்கள் பக்கச்சார்பானவை.

தடைகள் இல்லாமல், கருத்துச் சுதந்திரம் தவறான தகவல்களை பரப்புவதற்குத் தூண்டலாம் என்று மற்றவர்கள் கவலைப்படுகிறார்கள்.

எனினும் ஊழல், வன்முறை மற்றும் அரசியல் சண்டைகள் பற்றிய தொடர்ச்சியான அறிக்கைகள் ஒரு நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும், முதலீட்டைத் தடுக்கும் மற்றும் வளர்ச்சியைத் தடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68f4d447e68d6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த: சம்பந்தன் உள்ளிட்ட முக்கிய நபர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் மேல் நீதிமன்றங்களாக மாற்றம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கொழும்பு 7...

images 2 4
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

பொத்துவில் முஹுது மஹா விகாரைக்கு இந்திய உயர்ஸ்தானிகர் விஜயம்: தொல்லியல் இடங்களைப் பாதுகாக்க கோரிக்கை

பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முஹுது மஹா விகாரையை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா...

25 68ff93f31cee3
செய்திகள்இலங்கை

வெலிகம துப்பாக்கிச் சூடு: கைதானவர் குறித்த காணொளி பதிவு – காவல்துறை அதிகாரிகள் மீது சிறப்பு விசாரணை ஆரம்பம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக...

25 68ef777f06ff0
இலங்கைசெய்திகள்

அவிசாவளை நீதிமன்றத்தில் போலித் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற பெண் கைது: விளக்கமறியலில் உத்தரவு

போலித் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த நிலையில், அவிசாவளை நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவரைப்...