z0LStDYfSn36zvuAVpgZ
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

Share

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவுப் பொருட்களையும் அபகரித்துள்ளது.

யானையின் தாக்குதலால் பேருந்தில் வந்த 30 பக்தர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்துல்பாவ காவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

கபில என்ற இந்த யானை கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை இவ்வாறு தாக்கி துன்புறுத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சித்துல் பவ்வ விகாரையின் தலைவர் நஹிமியோ தெரிவித்தார்.

இந்த யானையை இந்த பகுதியில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை அது பலனளிக்கவில்லை.

கதிர்காமத்தில் இருந்து யால காடுகளுக்கு நடுவில் உள்ள சிதுல்பாவ கோவிலுக்கு சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் கதிர்கமுவ கல் வாங்குவ பகுதியில் வைத்து கபில என்ற இந்த யானை யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் தாக்குதலால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி, இருபுறமும் உள்ள கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் உள்ளேயும், மேற்கூரையிலும் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், பைகள் அனைத்தும் கீழே சிதறி கிடக்க காணப்பட்டது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...