z0LStDYfSn36zvuAVpgZ
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

Share

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்!

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவுப் பொருட்களையும் அபகரித்துள்ளது.

யானையின் தாக்குதலால் பேருந்தில் வந்த 30 பக்தர்களில் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சித்துல்பாவ காவல் நிலையப் பேச்சாளர் தெரிவித்தார்.

கபில என்ற இந்த யானை கடந்த மூன்று வருடங்களில் 500க்கும் மேற்பட்ட வாகனங்களை இவ்வாறு தாக்கி துன்புறுத்தி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சித்துல் பவ்வ விகாரையின் தலைவர் நஹிமியோ தெரிவித்தார்.

இந்த யானையை இந்த பகுதியில் இருந்து அகற்றுமாறு பல வருடங்களாக எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை அது பலனளிக்கவில்லை.

கதிர்காமத்தில் இருந்து யால காடுகளுக்கு நடுவில் உள்ள சிதுல்பாவ கோவிலுக்கு சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் கதிர்கமுவ கல் வாங்குவ பகுதியில் வைத்து கபில என்ற இந்த யானை யாத்திரிகர்கள் பயணித்த பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக வனவிலங்கு மற்றும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த யானையின் தாக்குதலால் பேருந்தின் பின்பக்க கண்ணாடி, இருபுறமும் உள்ள கண்ணாடிகள் உடைந்து பேருந்தின் உள்ளேயும், மேற்கூரையிலும் வைக்கப்பட்டிருந்த பார்சல்கள், பைகள் அனைத்தும் கீழே சிதறி கிடக்க காணப்பட்டது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...