tamilni 306 scaled
இலங்கைசெய்திகள்

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டி! இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றும் வசதி

Share

பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டி! இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றும் வசதி

இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை மருதானை தொடருந்து திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலை, பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டியை இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் மிக நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் தகடுகளை கட்டிங் மற்றும் மடிப்பு இயந்திரங்கள், பேட்டரி உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் இந்த தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...