27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அதன்படி, மின் கட்டணத்தை 18.3 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இவ்விடயம் தொடர்பான இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு,இதற்கான முன்மொழிவை மின்சார சபை சமர்ப்பித்துள்ள நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்னும் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி கிடைக்காது போனாலும் மின்கட்டணத்தை அதிகரிக்கும் நிலைப்பாட்டில் மின்சார சபை உறுதியாக உள்ளது.

உற்பத்திச் செலவை பூர்த்தி செய்து கொள்ளும் வகையில் மின்கட்டணத்தைக் குறைந்தது 18.3 வீதத்தினால் அதிகரித்தே ஆகவேண்டும் என்று மின்சார சபை வலியுறுத்தியுள்ளது.

மின்சக்தியின் உற்பத்திச் செலவை ஈடுகட்டும் வகையிலான கட்டண அதிகரிப்பொன்றை மேற்கொள்ளாது போனால் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட கடன் தவணை வழங்கப்படமாட்டாது என்ற நிபந்தனையின் பின்னணியிலேயே இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவடைந்த காலாண்டில் இலங்கை மின்சார சபை 18.47 பில்லியன் ரூபா நட்டத்தை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் நியாயமானவை: அமெரிக்க வெளியுறவு குழு தலைவர் பிரையன் மாஸ்ட் உறுதி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், மத்திய கிழக்கில் ஈரான் ஆதரவு குழுக்களை இலக்கு வைத்து அமெரிக்கா...

09 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மதுபோதையில் இருப்பவர்களால் பெண்களுக்கு அச்சுறுத்தல்: 71% பெண்கள் பொது இடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு!

மது அருந்தியவர்களினால் பொது இடங்களில் தமக்கு பாதுகாப்பு இல்லை என இலங்கையில் 71 வீதமான பெண்கள்...

08 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எப்போது? பரீட்சை ஆணையாளர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம்...

07 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

50,000 ரூபாய் லஞ்ச விவகாரம்: தெஹியத்தகண்டிய கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட இருவர் பிணையில் விடுதலை!

பணியில் மீண்டும் இணைந்த ஒருவரின் நியமனக் காலத்தை நீடிப்பதற்காக 50,000 ரூபாயை லஞ்சமாகப் பெற்ற வழக்கில்,...