tamilni 36 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது

Share

நாட்டை விட்டு தப்பி ஓட கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு ரணிலுக்கு கிடையாது

நாட்டின் நிலைமை தொடர்பில் ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல கோட்டாபயவுக்கு கிடைத்த வாய்ப்பு கூட ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஆசியாவிலேயே மின் கட்டணம் உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. 30 பில்லியன் ரூபா எதிர்பார்த்த வருமானம் கிடைக்காததன் காரணமாக மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறு மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் தென் ஆசியாவிலேயே உயர் மின் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை விளங்கும்.

நாட்டின் நிலைமை தொடர்பில் அடுத்த 100 நாட்களுக்கு ஆழமாக சிந்தித்து செயற்படாவிட்டால் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாட்டிலிருந்து தப்பிச் செல்ல கிடைத்த வாய்ப்பு கூட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்காது.

பொருட்களின் விலை அதிகரிப்புடன், அடக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. அடக்குமுறைகளால் ஜனநாயகம் படிப்படியாக அழிக்கப்படும் இந்த நாட்டுக்கு சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல, எந்தவொரு சர்வதேச அமைப்பும் உதவ முன்வராது.

இவற்றை மூடி மறைத்து ஊடகப்பிரிவின் ஊடாக எவ்வாறான பிரசாரங்களை முன்னெடுத்து வந்தாலும், அடுத்த ஆண்டு இந்தக் காலப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டுக்கு அனுப்பப்பட்டிருப்பார்.

கியூபா, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்துள்ளதால் என்ன நன்மை கிடைத்துள்ளது? கடன் பெறுவதற்கும், வரி அறவிடுவதற்கும், நாட்டின் சொத்துக்களை விற்பதற்கும் மாத்திரமே அரசாங்கத்துக்கு தெரியும். மக்களின் பொருமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சோதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் ஜனாதிபதி அலுவலகத்தை முற்றுகையிட்டு பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். உத்தேசத் தேர்தலில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆட்சி மாற்றத்தின் பின்னர் இவை அனைத்துக்கும் இந்த அரசாங்கம் நஷ்டஈடு செலுத்த வேண்டியேற்படும்.

அடுத்த வருடம் தேர்தலுக்குரிய வருடமாகும். ஜனாதிபதித் தேர்தலை ஒருபோதும் காலம் தாழ்த்த முடியாது. அதற்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் சில அமைச்சுக்களுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூலங்கள் தோல்வியடையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...