24 669cce7b2519b
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்

Share

இலங்கையின் தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள இந்திய புலனாய்வு தகவல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து கணக்கெடுப்பு அறிக்கைகளிலும் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதாக இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் ரோ புலனாய்வு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க வெளியிட்ட அறிவிப்பிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் பிரகாரம் இரண்டாவது இடத்தில் அநுரகுமார திஸாநாயக்கவும் மூன்றாவது இடத்தில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் கையாண்டு வருவதாகவும் அசோக அபேசிங்க கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....