18 17
இலங்கைசெய்திகள்

பேருந்துகளுக்காக கோடிகளில் பணத்தை கொட்டும் வேட்பாளர்கள் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Share

பேருந்துகளுக்காக கோடிகளில் பணத்தை கொட்டும் வேட்பாளர்கள் – மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

பேருந்துகள் மூலம் சுமார் 100 கோடி ரூபாய் இலாபம் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையவுள்ள இன்றைய தினம் நடைபெறும் கடைசி பொதுக் கூட்டங்களுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் குழுவினால் சுமார் 1500 பேருந்துகள் கோரப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி கட்சியினால் அதிகூடிய பேருந்துகள் பெறப்பட்டுள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை முழுவதும் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 500 பேருந்துகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 20ஆம் திகதி நாடு முழுவதும் 50 சதவீத பேருந்துகள் பணியில் ஈடுபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நடைபெறும் 21ஆம் திகதி 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை பேருந்துகளை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்றைய தினம் தொலைதூர சேவை பேருந்துகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...

Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...