24 3
இலங்கைசெய்திகள்

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

Share

பொதுத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் அனைத்து வேட்பாளர்களும் வேட்புமனுவுடன் தங்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்பு அறிக்கைகளை அந்தந்த தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

2023 இலக்கம் 09 ஐ கொண்ட ஊழல் தடுப்புச் சட்டத்தின் 80 (01) (P), 82 (01) (E), 82 (02), 89, 90 (04) ஆகிய சரத்துக்களின் படி, வாக்களிப்பு நாள் அறிவிக்கப்பட்ட நாள் வரையிலான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2023 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் எண் 9 இன் 80 (01) (பி), 82 (01) (இ), 82 (02), 89, 90 (04) ஆகிய பிரிவுகளின்படி, தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியுடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.

மேலும், சரத்து 99 A இன் படி, தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள், வேட்பு மனுவுடன், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.

வேட்புமனுவுடன் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கையையும் சமர்ப்பிக்கத் தவறினால், அது தண்டனைக்குரிய குற்றமாகும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

22727102 s
செய்திகள்விளையாட்டு

2026 உலகக் கிண்ணக் கால்பந்து அட்டவணை வெளியீடு: 48 அணிகள் பங்கேற்கும் திருவிழா ஜூன் 11 இல் ஆரம்பம்!

உலக மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் 2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்கான அட்டவணையை ஃபிபா...

images 4 2
உலகம்செய்திகள்

ஜப்பான் போர் விமானங்கள் மீது FCR ரேடார் மூலம் சீனா அச்சுறுத்தல்: பதற்றம் அதிகரிப்பு!

ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக...

articles2FSNhOIAsQzPoz2H46RiuW
உலகம்செய்திகள்

விமானப் பயணிகளுக்குச் சிங்கப்பூர் கடுமையான கட்டுப்பாடுகள்: ஜனவரி 30 முதல் அமுல்!

உலகளவில் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் முன்னிலை வகிக்கும் சிங்கப்பூர், தனது பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக,...