CEB
இலங்கைசெய்திகள்

மின் கட்டணத்துடன் இனி வரியும் அறவீடு!!

Share

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாதாந்த மின் கட்டணத்துடன் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை, இன்று (27) தெரிவித்தது.

சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்துக்கு அமைய, இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகமானது, 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சு அறிவித்தமைக்கு அமைய இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், சபை மேற்படி வரியை அறவிடவுள்ளது.

மின்சார பாவனைக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு நிதியமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும், குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சினால் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1ஆம் திகதி முதல் அமுல்படுதப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக, பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், பொருட்களின் விலைகளும் உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...