29 1
இலங்கைசெய்திகள்

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

Share

முட்டை விலை குறைவது பாதக நிலையை உருவாக்கும்! விவசாய அமைச்சு

முட்டை விலை குறைவதானது உற்பத்தியாளர்களுக்கு பாதக நிலையை உருவாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் செயலாளர் எம்.வீ நிசாந்த விக்ரமசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றின் விலை 36 முதல் 37 ரூபாவை விடவும் குறைந்தால் அது முட்டை கைத்தொழிற்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித் தீனியின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோழித் தீனியின் விலை குறைக்கப்பட்டதன் பின்னர் முட்டை ஒன்றின் விலையை 29 முதல் 30 ரூபா அளவில் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 32 முதல் 33 ரூபா செலவாகின்றது எனவும் இதில் அதிகளவு தொகை கோழி தீனி வகைகளுக்காக செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோழித்தீனியின் விலைகள் சோளத்தின் விலையில் கூடுதலாக தங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
arested 2
இலங்கை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பிரதேச சபை உத்தியோகத்தர் கைது!

நேற்றைய தினம், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் 40 ஆயிரம்...

QR முறைமை
இலங்கை

QR முறைமை நீக்கப்படுமா?

எரிபொருள் விநியோகத்திற்கான QR முறையும், வரம்புகளும் நீக்கப்பட வேண்டுமென பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளதுடன், இலங்கை...

bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...