நாட்டை வந்தடைந்தது முட்டை!

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் விற்பனை: வெளியான அறிவிப்பு

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட முதல் முட்டைத் தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது.

குறித்த முட்டை கையிருப்பு இன்று காலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரித்த முட்டை விலையை கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்தது.

அதற்கமைவாக 2 மில்லியன் முட்டைகள் முதற்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டைகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் பின்னர் அவை  சந்தைக்கு அனுப்பப்படவுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி தொழில் சார்ந்தவர்களுக்கு மானிய விலையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version