sajith 3
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார போரை ஆயுதத்தால் வெல்ல முடியாது! – சஜித் தெரிவிப்பு

Share

” பொருளாதார போரை ஆயுதத்தால் வெற்றிகொள்ள முடியாது. முறையான திட்டமிடலும், உரிய தீர்மானமுமே அதற்கு முக்கியம். இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த சஜித் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,

” உரிய முகாமைத்துவம் ஊடாக வரிசை யுகத்துக்கு முடிவுகட்டப்படும். நாட்டுக்காகவே இன்று இளைஞர்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர். அரச பயங்கரவாதத்தை அவர்கள் எதிர்க்கின்றனர். எனவே, போராட்டங்களை ஒடுக்குவதற்கு அரசு முற்படக்கூடாது.

தற்போதைய சூழ்நிலையிலும் இராணுவத்தினரை வைத்து அரசு பிரச்சாரம் செய்கின்றது. ஆனால் அன்று பொன்சேகாவை தற்போதைய ஆட்சியாளர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.

நாம் மக்கள் பக்கமே நிற்கின்றோம். எமக்கு பதவிகள் முக்கியமில்லை. அரசியல் டீலுக்கும் தயார் இல்லை. அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை, ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவரப்படும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...