ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார மறுசீரமைப்பே IMF ஒப்பந்தம்!

Share

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தின் அனுமதியையும் உதவியையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சட்டப்படி அனுமதி தேவையில்லாத போதிலும் அதனை பெறவுள்ளதாக ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்களுடன் வியாழக்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையானது பொருளாதாரத்தின் மறுசீரமைப்பு என்றும் குறிப்பிட்டார்.

நாட்டின் கடனில் மட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தை நாடு அமுல்படுதுமா? இல்லையா? என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது என்று தெரிவித்த அவர்,  கடனை கட்டவேண்டுமாயின் வீட்டிலிருக்கும் ஒரு பொருளை விற்றே ஆகவேண்டும் என்றார்.

எல்லா பங்கங்களிலும் தவறுகள் உள்ளன. அவற்றை திருத்திக்கொண்டு இணைந்து உதவுங்கள், சிந்தனைகளில் மாற்றங்கள் ஏற்படுத்துங்கள் எனக் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி பழைய விளையாட்டை விளையாட முடியாது. பல திட்டங்களை எதிர்த்தவர்கள் எம்மோடு இருக்கின்றனர் என்றால் நல்லதுதானே என்றார்.

அரசாங்கத்தி செலவை குறைக்கவேண்டும் வருமானத்தை அதிகரிக்கவேண்டும் அத்துடன் பணவீக்கத்தை குறைக்கவேண்டும். நாட்டை மீண்டெழச் செய்வதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இது வரலாற்று மாற்றம் என்றார்.

#SriLankanNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...