17
இலங்கைசெய்திகள்

கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

Share

கம்மன்பிலவின் அறிக்கை விவகாரம் அரசியல் நாடகம்: பகிரங்கப்படுத்தப்படும் குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வரும் உதய கம்மன்பில நாடக அரசியலை நடத்துவதாக இரத்தினபுரி மாவட்ட சர்வஜன பலய கட்சியின் வேட்பாளர் சமீர பிரசனக சோமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

சர்வஜன பலய கட்சியில் இருந்து விலகுவது தொடர்பில் இரத்தினபுரியில் நேற்று(31.10.2024) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மேலும், கட்சியன் தலைவர், திலித் ஜயவீர மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன உள்ளிட்ட புதிய அரசாங்கத்தின் மீது உதய கம்மன்பில குற்றம் சுமத்தி வருகிறார்.

எனினும் அதே குற்றச்சாட்டுடன் தொடர்புடைய தேசபந்து தென்னகோன், பூஜித ஜயசுந்தர தொடர்பில் மௌன கொள்கையை உதய கம்மன்பில கடைபிடிப்பதாகவும் அவர் குறிப்பிடுள்ளார்.

அண்மையில் தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் சர்வஜன பலய அரசியல் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்ட இனவாத வேலைத்திட்டம் குறித்து பெருமையடித்தமை, வெட்கப்பட வேண்டிய விடயம் எனவும் சமீர பிரசனக குறிப்பிட்டுள்ளார்.

எனவே இதுபோன்ற கட்சியுடன் இணைந்து அரசியல் செய்வது அருவருப்பானது என்றும், கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...