tamilni 136 scaled
இலங்கைசெய்திகள்

சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்!

Share

சிங்கள மக்களுக்கு எதிராக திருப்பி விடப்பட்ட இலங்கை இராணுவம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இராணுவத்தினை கொண்டு தங்களது சொந்த சிங்கள மக்களையே பலிவாங்கும் நடவடிக்கையினை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் ‘சனல் 4’ வெளியிட்ட ஆவணப்படம் குறித்து தமிழ் மக்கள் ஆச்சரியப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உண்மைகள் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை என்றும், இறுதி யுத்தம் தொடர்பான உண்மையினை சிங்கள மக்களுக்கு புரியவைப்பதற்கு போர் முடிந்து 15 வருடங்களாக போராடுவதாகவும்,அரசியல் இலாபங்களுக்காக தங்களது சொந்த மக்களையே பலிவாங்கும் நிலைக்கு இலங்கை அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...