இலங்கைசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல்! – 16 மேற்கு மறியல் நீடிப்பு

Share
image 95b76449a0
Share

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, சஹரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்றனர் மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில், காத்தான்குடியில் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 16 பேரின் விளக்கமறியல் உத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடித்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல், இன்று (15) உத்தரவிட்டார்.

2019 ஏப்ரல் 19ஆம் திகதி தாக்குதலில் ஈடுபட்ட சஹரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியை சேர்ந்தவர்கள், சஹரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட 66 பேரை கைது செய்யப்பட்டனர்.

காத்தான்குடி பொலிஸார் தாக்கல் செய்ய வழக்கில் இருந்து 3 பேர் விடுவிக்கப்பட்டதுடன், 47 பேருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், 16 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிணை வழங்கப்பட்ட 47 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 16 பேரும் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பித்த நீதவான், அனைவரையும் அடுத்தவருடம் ஜனவரி 31 திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...