image 3c0225be6d
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விருந்தில் போதைப்பொருள்! – 30 பேர் கைது

Share

தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​பெந்தோட்டை பொலிஸ் பிரிவில் போடியொலுவ பிரதேசத்தில், விடுமுறை இல்லத்தில் இந்த தனியார் விருந்து சனிக்கிழமை (17) அன்று நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ​தேடுதலின் போது, 1 கிராம் 535 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 21 வயதுக்கும் 37 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், அவர்கள, வத்தளை, கொழும்பு-12, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, மட்டக்குளிய மற்றும் வலஸ்முல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்டவர்களை பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த  பெந்தோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...