24 66412ec5e312e
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

Share

நாட்டை விட்டுத் தப்பியோடும் ஆபத்தான வர்த்தகர்கள்

இலங்கையின் முக்கியமான போதைப்பொருள் வர்த்தகர்கள் பலரும் அண்மைக்காலமாக நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது.

யுக்திய மற்றும் அதனுடன் தொடர்புபட்ட சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்படவிருந்த பலரும் இவ்வாறு தப்பி ஓடியுள்ளனர்.

மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணத்தை இலக்காகக் கொண்டு பல வருடங்களாக இவர்கள் போதைப்பொருள் வியாபாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு இவர்களின் பெயர் மற்றும் வசிப்பிடம் தொடர்பிலான பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்ய முயற்சிக்கும் சந்தர்ப்பத்தில் அவர்கள் நாட்டிலிருந்து தப்பியோடியுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் கைது செய்யப்படவுள்ள விபரம் பொலிஸ் திணைக்களத்திற்கு உள்ளிருந்தே போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு வழங்கப்படுவதன் காரணமாக அவர்கள், தம்மைக் கைது செய்ய பொலிஸார் தேடிவர முன்னரே நாட்டை விட்டும் தப்பியோடத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன் இவர்களுள் அநேகமானோர் வெளிநாடுகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் துபாய் போன்ற பாதுகாப்பான இடங்களில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக்கும்பல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...