24 6742cd4b5eb3d 1 1
இலங்கைசெய்திகள்

ரணில் மீது பாரிய குற்றச்சாட்டை சுமத்தும் ரவி கருணாநாயக்க

Share

ரணில் மீது பாரிய குற்றச்சாட்டை சுமத்தும் ரவி கருணாநாயக்க

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் மத்திய வங்கி தமது நிர்வாகத்தின் கீழ் இருக்கவில்லை எனவும், ரணில் விக்ரமசிங்கவின் கீழ் இயங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போதைய பிரதமர் ரணிலின் கீழ் மத்திய வங்கி இயங்கியதுடன் அரச வங்கிகள் கபீர் ஹாசீமின் கீழ் இயங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் தொடர்பு இல்லாத தம்மீது மத்திய வங்கி பிணை முறி தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தாம் ஓர் பட்டயக் கணக்காளர் எனவும் வயிற்றுப் பிழைப்பிற்காக தாம் அரசியல் செய்யவில்லை எனவும் உண்மையில் குற்றம் இழைத்திருந்தால் இவ்வாறு இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மிகச் சிறந்த நிதி அமைச்சராக தாம் தெரிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

தாம் சிறந்த முறையில் பணியாற்றிய போது அதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகத் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...