IMG 20220804 WA0054
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நல்லூருக்கு தங்க ஆபரணம் அணிந்து வராதீர்! – பொலிஸார் விசேட அறிவிப்பு

Share

நல்லூர் கந்தன் ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் தங்க ஆபரணம் அணிந்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் லியனகே தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்,

இந்த மாதம் முதலாம் தேதியில் இருந்து வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெறுகின்றது.

ஆலய வளாகத்தில் தேவையானஅளவு பாதுகாப்பு பொலிசாரினால் வழங்கப்பட்டுள்ளது

அத்தோடு விசேட பொலிஸ் அணியும் இங்கே வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணத்தில் மிகவும் முக்கியமான உற்சவமாக நல்லூர் ஆலய உற்சவம் இடம் பெறுவதனால் இந்த ஆலயத்தில் வரும் அடியவர்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் காணப்படும்.

ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்கப்படுகின்றேன் தங்க ஆபரணங்கள் அணிந்து ஆலயத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஏனென்றால் அதிக மக்கள் கூடும் இடத்தில் திருட்டு சம்பவங்களும் இடம்பெறலாம். அந்த திருட்டுக்களை தடுப்பதற்கு தங்களுடைய ஒத்துழைப்பு முக்கியம்.

இந்த திருட்டு சம்பவங்கள் இடம்பெறாமல் தடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். திருட்டுச் சம்பவங்களை மேற்கொள்வதற்கு வெளி மாவட்டங்களிலிருந்து ஒரு சிலர் இங்கே அணியாக வந்து செயற்படுவார்கள்.

எனவே தங்களுடைய நகைகள் மற்றும் அதிக பணங்களை ஆலயத்திற்கு வரும்போது எடுத்து வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தோடு நல்லூர் வளாகத்தில் சிவில் மற்றும் போலீஸ் சீருடையில் பொலிஸார் தேவையான அளவிற்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் திருட்டு சம்பவங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் அத்தோடு திருட்டுத் தொடர்பில் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இருந்தால் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக கடந்த வாரத்தில் யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தில் சில திருட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன அந்த சம்பவங்களை நாங்கள் உற்று நோக்கும்போது அதாவது பொதுமக்களின் அசண்டையீனத்தின் காரணமாக இந்த திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக தங்களுடைய வீடுகள் ஜன்னல்களை ஒழுங்காக பூட்டாமல் வெளியில் செல்லுதல் அல்லது பூட்டிவிட்டு திறப்பினை பாதுகாப்பில்லாத இடத்தில் பேணுவதால் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன எனவே அவ்வாறான சம்பவங்களையும் பொதுமக்கள் நீங்கள் கருத்தில் எடுக்க கொள்ள வேண்டும்.

அத்தோடு தற்போதைய காலகட்டத்தில் டெங்கு மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகின்றது எனவே கடந்த காலங்களில் பொலிஸாருக்கு மற்றும் சுகாதாரப் பிரிவினருக்கு பொது மக்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்கியதை போல தற்போது உள்ள நிலையிலும் பொலீசார் மற்றும் சுகாதார பிரிவினருக்கு நோய் தொற்றில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு உரிய ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...