5 7
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின்கீழ், திறைசேரி பற்றுச்சீட்டுகள் மற்றும் பத்திரங்களில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு செலுத்தப்படும் வட்டியை 9வீதமாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்த செயற்பாட்டின் மூலம், அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட நான்கு மனுக்களையே உயர்நீதிமன்றம் நேற்று(30.10.2024)தள்ளுபடி செய்துள்ளது.

சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினர் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...