செய்திகள்அரசியல்இலங்கை

டொலர் தட்டுப்பாடு! – துறைமுகத்தில் தேங்கி கிடங்கும் எரிவாயு சிலிண்டர்கள்

Share
litro 1
Share

சமையல் எரிவாயு சிலிண்டர்களுடன் 3 கப்பல்கள் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் டொலர் இல்லாததால் சிலிண்டர்களை இறக்கமுடியாதுள்ளதாக லிற்றோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதனால் கடந்த முதலாம் திகதி முதல் நாட்டில் எந்த பிரதேசத்திற்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பகிர்ந்தளிக்க முடியாமல்உள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேற்படி மூன்று கப்பல்களும் கடந்த முதலாம் திகதியிலிருந்து ஆறு தினங்களாக துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்ட நிலையில் ஒவ்வொரு கப்பலுக்கும் நாளாந்தம் 15,000 அமெரிக்கன் டொலர் தாமதத்திற்கான கட்டணம் வழங்க நேரிட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.எரிபொருள் கப்பல் துறைமுகத்தில் நங்கூடரமிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு செலுத்தவேண்டிய டொலர் இதுவரை கிடைக்கவில்லை.

நாளாந்தம் சுமார் 80,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வந்தன. அந்த நிலையில் கடந்த ஆறு தினங்களாக எந்தவொரு எரிவாயு சிலிண்டரும் சந்தைக்கு விநியோகிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நாட்டில் உருவாகியுள்ளது என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...