tamilnih 34 scaled
இலங்கைசெய்திகள்

400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : சிக்கல் நிலை

Share

400 ரூபாய் வரை சென்ற அமெரிக்க டொலர் : சிக்கல் நிலை

அமெரிக்க டொலர் 400 ரூபாய் வரை சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை என்ற ஒரு காலம் இருந்தது. ஆனால் இவ்வாறான நிலைமை தற்போது இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஒன்றரை வருடத்துக்கு முன்னர், போராட்டம் நடக்கும் போது ஒரு லீட்டர் பெட்ரோலை 3000 ரூபாவுக்குக் கூடப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இப்போது அந்த நிலைமையை மக்கள் மறந்துவிட்டார்கள் என்று கூறுவதற்கில்லை. கியூ.ஆர் குறியீடுகளை வைத்து பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட அளவிலும் வரம்பு இருந்தது.

இன்று அந்த நிலையை மாற்றி மக்களுக்குத் தேவையான அளவு எரிபொருளை வழங்கி வருகிறோம்.

டொலர் 400 ரூபாய்க்கு சென்றது. வெளிநாட்டில் இருந்து பொருட்களை கொண்டு வர டொலர்கள் போதுமானதாக இருக்கவில்லை.

இன்று இவ்வாறான நிலைமை இல்லை. எனவே, நாட்டில் மாற்றம் ஏற்படவில்லையென மக்களால் கூற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...