24 662dc6bf82cac
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

Share

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7 வீதத்தால் வலுவடைந்துள்ளமையால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததால் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 0.25 டிரில்லியன் ரூபா அல்லது சுமார் 25,000 கோடி ரூபாவால் குறையும் என பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் இறுதிவரை நாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி சுமார் 8 டிரில்லியன் ரூபாவாகும். அதில் 45 வீதம் நேரடி வெளிநாட்டுக் கடனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை 3.65 டிரில்லியன் ரூபாயாகும்.

இது தோராயமாக 7 சதவீதம் குறைக்கப்படும் போது, ​​நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடனின் ரூபாய் மதிப்பு 3.40 டிரில்லியனாக குறைகிறது.

எதிர்காலத்தில் ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுவடையும் போது இந்தத் தொகை மேலும் குறையும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாயின் பெறுமதி ஆண்டின் தொடக்கத்தில் 360 ரூபாயாக இருந்த தொகை ஏப்ரல் இறுதிக்குள் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால் நாம் செலுத்த வேண்டிய டொலர் தொகையில் ஒரு போதும் குறைவு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...

G5xpi4CbkAAZwxm
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ச – எம்.ஏ. சுமந்திரன் சந்திப்பு: NPP அரசுக்கு எதிரான நவம்பர் 21 பேரணி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்துக் கலந்துரையாடல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, இன்றையதினம் (நவ 15)...