25 691815396c06c
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கம்பளை கொலைச் சம்பவம்: 16 வயதுச் சிறுமி படுகொலைக்குப் பிறகு – சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!

Share

Suspect in Gampola 16-Year-Old Girl Murder Found Dead After Committing Suicide Following the Homicide.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 16 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான 27 வயதுடைய இளைஞர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் இன்று (நவம்பர் 15) தெரிவித்துள்ளனர்.

மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (நவம்பர் 14) இரவு தனது வீட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், இது தனிப்பட்ட அல்லது காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் தெரிவித்தனர். கொலைச் சம்பவம் இடம்பெற்ற பிறகு சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்வதற்காகக் கம்பளை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

திருகோணமலையில் தொழில் புரிந்த 27 வயதுடைய அந்த இளைஞர், கொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் இரவு (நவம்பர் 14) வீடு திரும்பியிருந்த நிலையில், சம்பவத்துக்குப் பிறகு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கம்பளை காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...