24 662dc6bf82cac
இலங்கைசெய்திகள்

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

Share

ரூபாவின் பெறுமதி மாற்றத்தால் இலங்கைக்கு கிடைத்துள்ள நன்மை

கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை ரூபாயின் பெறுமதி சுமார் 7 வீதத்தால் வலுவடைந்துள்ளமையால் நாட்டுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததால் இலங்கை செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 0.25 டிரில்லியன் ரூபா அல்லது சுமார் 25,000 கோடி ரூபாவால் குறையும் என பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் இறுதிவரை நாம் செலுத்த வேண்டிய மொத்தக் கடனின் பெறுமதி சுமார் 8 டிரில்லியன் ரூபாவாகும். அதில் 45 வீதம் நேரடி வெளிநாட்டுக் கடனாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தத் தொகை 3.65 டிரில்லியன் ரூபாயாகும்.

இது தோராயமாக 7 சதவீதம் குறைக்கப்படும் போது, ​​நிலுவையில் உள்ள வெளிநாட்டு கடனின் ரூபாய் மதிப்பு 3.40 டிரில்லியனாக குறைகிறது.

எதிர்காலத்தில் ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வலுவடையும் போது இந்தத் தொகை மேலும் குறையும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாயின் பெறுமதி ஆண்டின் தொடக்கத்தில் 360 ரூபாயாக இருந்த தொகை ஏப்ரல் இறுதிக்குள் 300 ரூபாய் வரை குறைந்துள்ளது.

ஆனால் நாம் செலுத்த வேண்டிய டொலர் தொகையில் ஒரு போதும் குறைவு ஏற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Man S Death Body
இலங்கை

தொடருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சடலம்!

வத்தளை, ஹுனுப்பிட்டிய தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள புதர்க்காடு ஒன்றிலிருந்து அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரின் சடலம்...

vietnam food tourism 7
இலங்கை

உலக அளவில் இலங்கை உணவுகளுக்கு கிடைத்த அங்கீகாரம்.

பிரபல சர்வதேச சுற்றுலா இதழான “Travel And Tour World – ட்டிவ் ” வெளியிட்டுள்ள...

low r
இலங்கை

யாழ். பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற கட்டளை இதுதான்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலைப்பீடாதிபதியான சிவசுப்பிமணியம் ரகுராம் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக முன்னாள் பல்கலைக்கழக மாணவியும்...

Negombo Prison
இலங்கை

மேலும் இரண்டு உயிர்கள் பலி – நீர்கொழும்பு சிறையில் தொடரும் அவலம்!

  கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறை அதிகாரிகள் உயிரிழந்தனர்....