ஆட்சியாளர்களின் தேவைக்காக துப்பாக்கியை தூக்காதீர்கள்! – பொன்சேகா வலியுறுத்து

srilanka asia fonseka 89789

” ஆட்சியாளர்களின் தேவைக்காக மக்கள் பக்கம் துப்பாக்கியை திருப்ப வேண்டாமென படையினரிடமும், பொலிஸாரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அரசமைப்பின் பிரகாரமே பாதுகாப்பு தரப்பு செயற்பட வேண்டும். நாட்டையும், மக்களையும் காக்க வேண்டும். போர் காலத்தில்கூட நாம் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.

எனவே, மக்கள் பக்கம் துப்பாக்கியை திருப்ப வேண்டாம் என படையினரிடமும், பொலிஸாரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களின் போராட்டம் வெற்றியை நோக்கி பயணிக்கின்றது. எனவே, போராட்டத்தை கைவிட வேண்டாம் என இளைஞர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார் பொன்சேகா.

#SriLankaNews

Exit mobile version