Susil Premajayantha 3 750x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சுசிலுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!!

Share

பாராளுமன்ற நடவடிக்கைகளின் போது தன்னை ஆபாசமான வார்த்தைகளில் திட்டியமைக்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சபை அமர்வின் போது, தனது கேள்விக்கு பதிலளித்த குறித்த வார்த்தையை அமைச்சர் பயன்படுத்தியதாக ரோஹினி எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த கருத்து பல்வேறு தளங்களில் வலம் வந்தாகவும், தாய் மற்றும் பெண் என்ற தனது பொதுப் பிம்பத்தை பாதித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறான சம்பவங்களால் பாராளுமன்றம் மற்றும் எம்.பிக்கள் மீதான மக்களின் அணுகுமுறை எவ்வாறு அமையும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிடம் சமர்ப்பித்து  சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...