sri lanka
இலங்கைசெய்திகள்

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

Share

பிரான்ஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவை

இலங்கையின் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பிரான்ஸ் தலைநகர் பரிஸூக்கு மீண்டும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் எயார் பஸ் ஏ 330 – 300 வகை விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பரிஸூக்கு வாரத்தில் 3 தினங்கள் விமான சேவையை நடத்தவுள்ளது.

அதன்படி வாரத்தில் புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாள்களில் முற்பகல் 12.35 மணிக்கு விமானம் புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் மறுநாள் காலை 7.40 மணிக்கு பரிஸை சென்றடையும்.

மீண்டும் அங்கிருந்து அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...